சனி, 31 டிசம்பர், 2011

Chicago bulls: the rising.......




கல்லூரில தூங்காம எப்படி பாடத்த கவனிக்கறதுனு யாராவது பாடம் எடுத்தா நல்லா இருக்குனு வெளில இருக்க பூவரசம் மரத்த பாத்து யோசிச்சிட்டு இருந்த அந்த மதிய நேரம் ரம்மியமா இருந்தது. வகுப்பில இருந்த 54 பேரும் அந்த ஜீன் மாத ரம்மியத்த ரசிக்காம கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தாங்க, 54 பேரும் ஆண்களா இருந்த சவுகரியம் கெட்ட வார்த்தை பேசரதும், கேக்கரதும் சகஜமா இருந்தது, அந்த மாதிரி ஏதோ ஒரு காரணத்துக்காக அவன் கோபத்த வெளிப்படுத்த எதுகைமோனையோட நண்பன் ஒருத்தன் உறையாற்றிட்டு இருந்தான் அத ரசிச்சிக் கேட்டுட்டு இருந்தப்ப எங்க சந்தோசத்த பங்கம் பண்ண லெக்சுரர் வகுப்புல நுழஞ்சார்.

மதியம் சாப்பிட்ட சாம்பர் சாதம் வயத்த நிரச்சி தூக்கத்துக்கு ரூட் போட்டுட்டு இருந்த அந்த மணிதுளில லெக்சரர் தெர்மோடைனமிக்ஸ்ல மொத்தமாவே 4 பேர் தான் பாஸ் ஆகி இருக்கீங்க இப்படியே போன டிகிரி கஸ்டம் தான்னு சொல்ல ஹைவேல போய்ட்டு இருந்த தூக்கம் பைபாஸ்ல போய்டிச்சி. ஏதோ சொல்ல வரார்னு உள்ளுணர்வு சொல்லிச்சி.

வகுப்பே அமைதி ஆச்சி எல்லாருக்கு உள்ளுணர்வு சொல்லி இருக்கு போல, (லெக்சுரர்னு டைப் அடிக்க கஸ்டமா இருக்கு அதுனால இனிமே வாத்திங்கற வார்த்தைய லெக்சுரர்னு பொருள் கொள்க) வாத்தியோட இந்த கீச்சு குரலுக்கா இந்த மகத்துவம்னு (கீச்சு குரல்னு அவர கிண்டல் பண்ணல அவரோட குரல் இயல்ப சொல்ல வேற சரியான வார்த்தை சிக்கல) யோசிச்சி இல்ல நாம என்ன பண்ணனும்னு நாம யோசிச்சிட்டு இருந்ததுக்கு தீப்பொறி வச்சிருக்கார்னு தோணிச்சி.

இனி வாத்தி என்ன சொன்னார்னு அவரோட மொழியில “இப்படி இருந்தா வாட் ஆர் யு கோயிங் டு டூ கைஸ் (என்ன பண்றது அரியர் தான் எழுதணும்னு ஒருத்தன் முனுகணுது கேட்டாலும் அத சட்டப்பண்ணாம எல்லாம் வாத்தி சொற்பொழிவுல கவனமா இருந்தாங்க), 2ண்ட் செமஸ்டர்லயே இத்தண அரியர் வச்சா ஃபைனல் செம்ல இத எப்படி கிளயர் பண்ணுவிங்க (திரும்ப ஒருத்தன் பிட்டு தான் வேற என்ன பண்ணரதுனு சொன்னத சட்டப்பண்ணாம எல்லாம் வாத்தி சொற்பொழிவுல கவனமா இருந்தாங்க) நீங்களா யாரு மெக்கானிக்கல் இஞ்சினீயர் ஆக போறவங்க, இந்த மாதிரி படிச்சிட்டு இருந்தா ஒண்ணும் ஆக முடியாது, தனி தனியா படிச்சிங்கினா (அப்படியே படிச்சிட்டாலும்னு திரும்ப எவனோ சொன்னது வேற ஒரு சந்தர்ப்பமா இருந்திருந்தா சத்தமா சிரிக்கிறதுக்கு உதவியிருக்கும் ஆனா அந்த சமயத்துல வாத்தியோட வார்த்தைகள் அத முடக்கிடச்சி) உங்களுக்கு சந்தேகம் வந்தா அத தீர்த்துகிறது கஸ்டமா இருக்கும் அதுக்கு எல்லாரும் குரூப் குரூப்பா படிக்கணும் அப்ப தான் ஒருத்தர் டவுப்ட இன்னொருத்தர் தீர்த்துக்க முடியும் (அப்ப லெக்சுரர்னு நீங்க எதுக்கு இருக்கீங்கனு திரும்ப எவனோ முணகிக்கிட்டு இருந்தான்).

நமக்கு தேவ டீம்ஸ் ஒருத்தர்க்கு ஒருத்தர் தோள்க் கொடுத்து நிக்கிற டீம், இப்ப நான் அஞ்சு அஞ்சு பேரா டீம் பிரிக்க போறேன் (என்ன என்னவோ பண்றாருப்பானு திரும்ப எவனோ முணுகிக்கிட்டு இருந்தான்) ஒரு ஒரு டீம் பிரிச்சதுக்கப்புறம் அந்த அஞ்சு பேரும் சேர்ந்து அவங்க டீம்க்கு ஒரு பேர் செலக்ட் பண்ணனும் அப்புறம் இந்த டீமுக்கு நடுவுல நிறைய சப்ஜெக்ட் ரிலேட்டட் குவிஸ் புரோகிராம், காம்படீசன் நடத்தணும் அப்ப உங்களுக்குள்ளயே படிக்கணும்னுங்கற எண்ணம் அதிகம் ஆகும் (இப்ப எவனும் கமெண்ட் பண்ணாம இருந்தான்ங்க) நல்லா படிப்பிங்க மெக்கனிகல் டிப்ட்னா எப்படினு அப்ப மத்த டிப்ட்டுக்கு தெரியும்னு அவரு சொல்லசொல்ல எல்லார் முகத்தலயும் ஒரு பரவசம் உண்டாக்கிட்டு இருந்தத கவனிக்க முடிஞ்சது.

சரி இப்ப டீம் பிரிப்போம்னு அஞ்சு அஞ்சு பேரா பிரிச்சிட்டு இருந்தார் அப்ப என்னைய, கீர்த்திய, சதீச, விசுவ, அறிவ ஒரு டீமா அறிவிச்சார், இப்ப எல்லாரும் தனி தனி குழுவா உட்காந்து என்ன பேர் வைக்கிளாம்னு யோசிச்சாங்க. நாங்களும் யோசிச்சோம் எங்களுக்கு இன்ஸ்பிரேசன் தேவப்பட்டுது, ஆளுக்கு ஒரு பேர் சொல்லிட்டு இருந்தப்ப எங்க டிப்பார்ட்மண்ட்டோட குல விளையாட்டான பேஸ்கட்பால் டீம்ல ஏதாவது ஒண்ண தேர்ந்தெடுக்கரதா முடிவாச்சு, எப்பவும் ஜெய்ச்சே பழக்கப்பட்ட ஒரு டீம் பேர் வேணும்னு யோசிச்சப்ப உண்டான பேர் தான்  *CHICAGO BULLS*.

அந்த பேர்ர வச்ச உடனே எங்களுக்குள்ள ஏதோ மாற்றம் உண்டான மாதிரி ஒரு உணர்வு, எல்லாரும் அவங்க அவங்க டீம் பேர சொன்னாங்க, நாங்க எங்க டீம் பேர சொன்னப்ப, ஹெஹெஹேனு சிரிச்சி என்ன மச்சி எருமனு பேர் வச்சி இருக்கீங்கனு நக்கலா சொன்னப்ப இவங்களுக்கு நாங்க யாருனு காட்டணும்னு முடிவு பண்ணனோம்.

முதல்ல நடந்த 2 சப்ஜெக்ட் ரிலேட்டட் குவிஸ்லயும் பெருசா எங்களால மார்க் ஸ்கோர் பண்ணல ஆனா நாங்க எந்த ஒரு சந்தர்ப்பத்தலையும் நாங்க நம்பிகைய மட்டும் இழக்கவே இல்ல, இழக்கரதுக்கு ஒண்ணும் இல்லாதப்பையும் நம்பிக்கை மட்டும் எப்பவும் கூடவே இருந்தது.

அதுக்கப்புறம் எங்க ஸ்டெர்ந்த் ஆஃப் மெட்டீரியல், தெர்மல் லேப் எல்லாத்துலயும் நடந்த பேனா ஃபைட், படம் பேர நடிச்சி கண்டுப்பிடிக்கறதுனு எந்த ஒரு போட்டியா இருந்தாலும் ஜெய்கிறத மட்டுமே பழக்கமா வச்சிக்கிட்டோம். பெருமைக்கு பட்ட பேர் வச்சிக்கிற இந்த உலகத்துல டீமுக்கு மதிப்பு கொடுத்து புல்ஸ்ங்கற வார்த்தைய பேருக்கு முன்னாடி சேர்த்து விஸ்வரூபம் எடுத்தோம், இன்னமும் நீங்க ஆர்குட்லயோ ஃபேஸ்புகலயோ புல்ஸ்னு தேடுனா எங்க பேர்கள் சர்ச் ரிசல்ட்ல வரத தவிர்க முடியாது. BULLS have raised........

பி.கு: டைம் பாஸாகத்ததுக்கு எழுதன இந்த சரித்திர சம்பவத்த நீங்களும் டைம் பாஸுக்கு தான் படிக்க வந்திருக்கீங்கனு தெரியுது, பேட் வேர்ட்ஸ் எதுவும் உங்களுக்கு சொல்லணும் போல இருக்கும் ஆனா அதுக்குனு கமெண்ட் போஸ்ட்ட டேமேஜ் பண்ணிடாதீங்க......






புதன், 9 நவம்பர், 2011

போர்


நான்காம் சுற்றின் இறுதியில் ஒரு சொட்டு குருதம் வீணாய்யிருந்தது, ஒன்று வீழ வேண்டும் அல்ல வீழ்த்தப்பட வேண்டும், துப்பாக்கித்தோட்டாகளின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து கொண்டிருப்பது அத்தணை நல்ல சகுனமாக தோன்றவில்லை, இன்னும் போராட்டகாலம் நீண்டத்தூரம் விரவி கிடக்கிறது.  இன்று போராட்டம் தீவரமடைந்திருப்பதிற்க்கு காரணம் எங்கள் பலம் ஓங்கி இருப்பதற்கு சாட்சியா அல்லது எதிரியின் பல குறையாமல் இருப்பதற்க்கான அறிவிப்பா………மாலை நடக்கும் சுவாரசியமற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் போதே அது தெளிவுபடும்.
மூடுப்பனியுடன் இந்த புகையும் சேர்ந்து இன்னும் காலக்கட்டத்தின் நிலையற்றத்தன்மையை அதிகப்படுத்தி கொண்டிருந்தது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி இத்தகைய ஒரு நிலையற்றத்தன்மையை உருவாக்கும் என எந்த தரப்பினரும் கருத்தில்க்கொள்ளாத நிலையில் வாழ்வு தனக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த கணத்தை வெகு விமர்சையாக வெளிப்படுத்தியது ரத்தத்தின் நிறம்க்கூட காணாத பல தமிழ் மக்களின் பார்வைக்கு.
இப்பொழுது அதை நினைவில் கொண்டு வருவது அத்தணை பயனளிக்க போவதில்லை ஆனால் ரத்தத்தில் தோய்ந்து போன ஒரு ஒரு முகங்களிலும் தோன்றி தோன்றி மறையும் தங்கள் இறந்தக்காலத்தின் வாழ்வின் வெளிப்பாடு இந்நினைவுகளை அதிகப்படுத்தி கொண்டிருந்தது. நாட்கணக்குகளும் வாரக்கணக்குகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக உணர்ந்து கொண்டிருந்த காலங்கள் இந்நிலமை வாழ்விற்கு காரணமாக என் மனதிற்குப்படுவதை எக்காரணம் கொண்டும் தவிற்க்க முடியவில்லை. உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டிருந்தது, வாழ வேண்டும் என்ற உத்வேகமும், உயிரை தொலைக்காமல் இருக்க நொடிக்கு நொடி விழிப்போடு இருக்க வேண்டும் என்ற உணர்வும் கூடல்களையும், புதிய உயிர் அப்பிராந்தியத்தில் உருவாகுவதற்க்கான சாத்தியத்தை முழுவதுமாக துடைத்தெறிந்திருந்தது.
விஸ்க்…….விஸ்க்…..ஒரு வினாடி விலகல் என் உயிரை தோட்டாக்களில் காப்பாற்றியிருக்கிறது, இனி நினைவுகளில் மூழ்க கூடாது அது வாழ்வின் நிதர்சனத்தை இழக்க செய்கிறது, தோட்டா வடக்கிலிருந்து தான் வந்தது அது துளைத்துள்ள தோற்றத்தை கவனித்தால் உயரித்தில் இருந்து குறி பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்த திசையில் ஒரே ஒரு ஒற்றை வீடு ஜன்னலின் திரை விலகி வழிக்காட்டியதில் ஒரு துப்பாக்கி முனை ஸ்னைப்பர் வகையாறாவாய் இருக்கவேண்டும், எண்ணங்களும் செயல்களும் ஒன்றாய் இருக்க வேண்டிய கட்டாயம் அந்த துப்பாக்கிக்காரனை எவ்வாறு அழிப்பது என்று தெளிவாய் விளக்கியது.
திடத்திக்கரமான சிந்தனையும், தெளிந்த எண்ணமும், தன்மானமும் நீர்த்துப்போகி இனம் கொஞ்சம் கொஞ்சமாய் சென்னை மாநகரின் அழுக்கில் யாருக்கோ உழைத்து கொண்டிருந்தது ஓநாய் விழிகளுடன் எல்லாவற்றையும் விழுங்கி விடுவது போல, இதோ நாளை நல்லதாக பிறக்கும், இல்ல பிறக்கவைக்கப் படும் என்று வரிசையில் நின்றிருந்தது கூட்டம், வரிசை நீண்டுக் கொண்டே சென்றது. ச்ச திரும்ப நினைவுகள், நிதர்சனத்தை உணர், எதிரிய எப்படிக் கொல்ல போற யோசி யோசி…….யோசித்துக் கொண்டே இருந்தேன் அந்த ஆறு எவ்வளவு அழகா இருக்கு பச்சை நிறத்துக்குத் தான் என்ன ஒரு குணம் இந்த தெளிந்த வெயில்ல  தென்னைமரங்களும், மாமரங்களும் தான் என்ன ஒரு பசுமை, ஆனா அந்த சண்டையில எப்படி அந்த துப்பாக்கிக்காரன கொன்னேன், அந்த சண்டை வர என்ன காரணம் யோசி யோசி, “டே மச்சி என்ன யோசிச்சிட்டு இருக்க, மேட்ச் ஆரம்பிக்கப் போகுதுடா வா இன்னும் ஒரு மேட்ச் தான் அப்புறம் ஃபைனல்ஸ்”ங்கற வார்த்தை என்னை எழுப்பிச்சி சுத்தியும் ஆரவாரம் அந்த கூடைப்பந்து மைத்தாத்த சுத்தி தங்களையும் விளையாட்டோட்ட இணைச்சி வேறெந்த சிந்தனையும் இல்லாத கூச்சல்கள், எல்லாத்தையும் செவியை நிறைத்து வெளிய போய்ட்டு இருந்ததது, கைய விட்டு நழுவாம இருக்கரதுக்காக கிரிப்போட வடிவமைக்க பட்ட சிகப்பு பந்த இறுக்கமா புடிச்சிட்டு இருந்தேன், ரெஃப்ரி குழல ஊத ஊத மெல்ல என் கண்ண விட்டு மங்கலா மறஞ்சிட்டு இருந்தார்.
நான் என் கணினி திரையை உத்து பாத்துக்கிட்டு இருந்தேன், அதுல நிர்வாணமா புணர்ந்துக்கிட்டு இருந்த ஒரு உருவங்கள மூளையோட தொடர்புப்படுத்தி கண்களுக்கும் எண்ணங்களுக்கும் பாலம் உண்டாக்கி இருந்தேன், விஸ்க் விஸ்க் இரண்டாவதுத்தோட்டா என் தொடையை உரசி என் குருதியின் இரண்டாவதுச் சொட்ட வீணாக்கி இருந்ததது.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சிறு காதல்...

இது ஒரு தொடர் தொகுப்பு.......எல்லா சொற்தொடரையும் வெவ்வேறு சமயத்தில் எழுதினேன் ஆனா கடசியா எல்லாத்தையும் படிச்சி பாத்தா எல்லா வரிகளும் தொடர்புடைய மாதிரி எனக்கு ஒரு எண்ணம்.....அத வரிச படுத்தி இருக்கேன்......


6 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடமும், 70 வயதுக்கும் அதிமான வயதான பெரியவர்களிடமும் பழகும் போது கடவுளின் தடம் சிறிது தெரியும் என சொல்லி கேள்வி...எனக்கு கடவுள்க்கிட்ட பழகணும்ங்கற அளவுக்கெல்லாம் ஆசையில்லங்க....ஒரு வயசு பொண்ணுகிட்ட பழகினா போதும்னு பாக்குறேன் ...ஆனா பாருங்க அதுக்குக்கூட கொடுத்து வைக்கில....




அழகியல் என்பது பார்க்கப்படும் பொருளின் தன்மையை பொறுத்து அன்று..........அது பார்க்கப்படும் பார்வையின் தன்மையை பொறுத்து....
தாய்க்கு தன் பிள்ளை...
எனக்கு என்றென்றும் நீ மட்டும்.......





எப்பொழுதும் சட்டென சுருங்கி கொள்ளும் என் முகம்......உன்னுடன் பேசும் கணங்களில் புன்னகையால் விரிந்துக்கொண்டே சென்றது என்னையும் அறியாமல்......என் புன்னகை என்றென்றும் நிலைத்திறுக்க என்னுடன் இருப்பாயா......


எங்கே உன்னை காதலித்து விடுவேனோ என்று பயம் கொள்கிறேன்......
ஆனால் அப்பயம் வேணுமென்னும் என் இதயத்திற்க்கு என்ன சொல்வேன்.......நீயே சொல்......



எந்த பெண்ணை காதலிக்கிறாய் என்று கேட்கும் என்னவளிடமே எப்படி கூறுவேன்........அடியேய் நீ தான் என்று.......


என் காதலின் ஆழத்தை உணர்த்த வார்த்தை கிடைக்காத தருணங்களில் சில முத்தங்களின் சத்தம் உதவிக்கு வந்தன......


அழுதறியாத என் கண்கள் வழியே கண்ணீராக என்னுள் கரைந்த போன உன் நினைவை வெளித்தள்ள அழுகிறேன்........கண்ணீர் மட்டும் புறம் செல்ல.......என் அகமே நீயானாய் பெண்ணே......


கவிதனுலா சொல்லல சும்மா தோணிச்சி எழுதினேன்.......