செவ்வாய், 22 டிசம்பர், 2009

தண்ணீர்.....



உலகம் முக்கால் வாசி(71%) தண்ணீரால் உருவானது எனினும் அதில் 0.6% சதவீதமே நிலத்தில் உள்ள தண்ணீர். அதில 60% நல்ல நீர் விவசாயத்துக்கு பயன் பட படுகிறது மீதம் 30% நமது இதர தேவைகளுக்கு. நான் சொல்வது உலக அளவில். அதில் 4% தான் இந்தியாவில் உள்ள தூய நீர் ஆகும். அந்த 4%த்திலும் தமிழ் நாட்டில் வேறும் 3% சதவீதமே உள்ளது. ஆக தெளிவாக நாம் உபயோகபடுத்த கூடிய நிலையில் உள்ள நீரை மிக குறைவாக, மிக மிக குறைவாக கொண்டுள்ளோம் என்பதை உணரலாம் (உணர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள படும் போது உணருவோம் நிச்சயமாக)

நாம் சற்று நெருங்கி தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தை, நிலையை காண்போம்.

http://www.environment.tn.nic.in/soe/images/Waterresources.pdf

மேல் கொடுக்க பட்டுள்ள இணைப்பே தமிழ் நாட்டின் நீர் ஆதாரங்களை பற்றியும், நிலையையும் விளக்குகிறது.

நீர் ஆதாரங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் நிலத்தின் மேல் உள்ள நீர், நிலத்தின் கீழ் உள்ள நீர்.

மும்மாறி(அப்படியெனில்) பெய்த மழையும் இன்று பொய்த்து விட்டது. வருடத்திற்க்கு சராசரியாக இந்தியாவில் 1250 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. ஆனால், தமிழ் நாட்டின் சராசரி மழைபொழிவு 470 மில்லி மீட்டரே(கவனத்தில் கொள்க நாட்டின் சராசரியில் பாதி கூட இல்லை)

நிலத்தின் மேல் உள்ள நீர் ஆதாரங்களாக 17 ஆற்று படுகைகளும், 61 நீர்த்தேக்கங்களும், 41,948(தோராயமாக) ஏரிகளும்(எதுவும் நாம் உருவாக்கியது அல்ல நம் முன்னோர்கள் நமக்கு அளித்த வரம்) நம் தமிழ் நாட்டில் உண்டு (என நம்பி கொண்டிருக்கிறோம், அல்லது நம்ப வைக்க படுகிறோம், எத்தணையோ நீர் ஆதாரங்கள் பிளாட்களாகவும், பங்களாக்களாவும் மாறி விட்டது). அது தேக்க கூடிய நீரின் அளவு 27,270 மில்லியன் கியூபிக் மீட்டர்கள்(27 270 000 000 000 லிட்டர் என கணக்கில் கொள்ளலாம்) அதில் 90% சதவீதம் விவசாயத்துக்கு பயன் படுகிறது(விவசாயம் இன்னும் எத்துணை காலம் நம் நாட்டில் இருக்கும் என தெரியாது ஆகையால் நாம் கவலை கொள்ள வேண்டாம்), ஆக நாம் உபயோகிக்க மிக சொற்ப நீரே உள்ளது.

நிலத்தடி நீரின்(நீர் தேங்க கூடிய அளவு) அளவு 22,423 மில்லியன் கியூபிக் மீட்டர்கள். ஆனால், அளவுக்கு அதிகமான நீர் உரிஞ்சிததால் நம்மிடம் தற்போது மொத்த நீரின் அளவில் 40% சதவீதமே உள்ளது. பல மாவட்டங்களில் கவனிக்கதக்க அளவில் கிணறுகள் இறந்து விட்டன (எவ்வளவு தோண்டினாலும் நீர் இல்லை).

ஆனால் வரும் காலங்களில் தண்ணீரின் தேவை நிச்சயம் அதிகரிக்கும் என நீர்துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

நமக்கு தேவை அதிகமாக உள்ளது விவசாயித்திற்க்கே (நம் நாடு விவசாய நாடு என்பதை மறந்து காலங்கள் ஓடி விட்டது), விவாசய நிலங்கள் 50% கிணறுகளாலும், 30% ஆற்றாலும்(ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால்கள்), 20% குளங்களாலும் பாசனம் செய்ய படுகிறது.

ஆனால் பல பாசன வசதிகள் நமது அதிக தேவையால் அதனுடைய கடைசி கட்டத்தை எட்டி விட்டது(உதாரணம் 16,000 கிணறுகள் இறந்து விட்டன).

பல விதமான சீரிய நீர் (சொட்டு நீர்) பாசன முறை வந்துவிட்டாலும் இன்னும் நாம் அதன் மூலம் அல்லது அதை பற்றிய சரியான புரிதல் இல்லாததால் உபயோக்கிக்காமல் உள்ளோம்.

அரசாங்கமும், தொண்டு நிறுவனமும், நம் சந்ததியை பற்றி கவலை கொள்ளும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் நீர் ஆதாரத்தை காக்க போராடுகின்றனர். ம்ஹ்ம் நமக்கு டிவியும், நமது விருப்பங்களும் தான் முக்கியம் ஆதலால் இதை பற்றி எப்பொழுதும் கவலை கொள்ள வேண்டாம், நாம் அசுத்தம் கலந்த நீரை குடிக்கும் நிலை வரும் வரை அந்நிலை வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது திண்ணம்.

நம்ம ஊர்ல மழ பெய்றதே கஸ்டம் இதுல பெய்ற மழைய தேக்கி வைக்கிறது ரொம்ப கஸ்டம். இவ்வளவு கஸ்டப்பட்டு தண்ணிய சேமிச்சி வச்சா ம்ம்ம் நாம அத கண்ட கழிவுகளால (மனித கழிவு, ரசாயன கழிவு, ஆலை கழிவு எல்லாம் உள்ளடக்கம்)வீணாக்கிடுறோம்.

காடுகளை அழித்தல், அதிக படியான நீரை இரைப்பதால் உப்பு நீர் நிலத்தடி நீரில் கலத்தல் அதனால் நிலம் பாதிக்க படுதல், இப்பொழுது விவசாயித்தில் பயன் படுத்த படும் உர கழிவுகளும், நிலத்தை கையகபடுத்ததாலும் என எந்வ்வளவு முடியுமோ அந்த அளவு நிரையும், நீ ஆதாரத்தையும் அழித்து கொண்டிரிக்கிறோம்.

மரம் இல்லாததால் மழை நீர் ஓரிடத்தில் சேமிக்கபடாமல் மண்ணை அரித்து கொண்டு வீணே ஓடுகிறது. அது மட்டும் இல்லாமல் சரியாக தூர்வார படாததால் பல நீர்தேக்கங்கள், ஏரிகளும் தங்கள் நீர்தேக்க திறன் அல்லது இயல்பை இழந்து விடும் அபாயம் உள்ளது.

சென்னையில் நல்ல நீர் என ஒரு விசயமே இல்லாமல் போய் நிறைய காலம் ஆகி விட்டது.

ஆக எல்லா நீர் ஆதரங்களையும் அழித்து கொண்டு இருக்கிறோம், இது அனைத்தும் நமக்கு பெரிய விசமாக இப்பொழுது தோன்றாவிடிலும் தமிழ் நாடே இந்நிலை தொடர்ந்தால் நிச்சயம் பாலைவனம் ஆகும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

மழை நீரை சேமிக்க அரசாங்கம் திட்டம் வகுத்தாலும் அதை செயல்படுத்த மக்களாகிய நாம் தான் அத்திட்டத்தை செயல்படுத்த முடியும். அது மட்டும்மின்றி நீரின் முக்கியதுவத்தையும் அதை சேமிக்கும் மற்றும் உபயோகிக்கும் முறையையும் நாம் சரி வர உணர்ந்து செயல்பட கடமை பட்டுள்ளோம் நிச்சயமாக இது நமக்காக நாமே வைத்து கொள்ள வேண்டிய ஒரு விசயமாகும்.

டாஸ்மாக் தண்ணியை பத்தி கவலை படும் நாம், உயிர் ஆதாரமான நீரை பற்றி நிச்சயம் கவலை கொள்வது நியாயம் என எண்ணுகிறேன்.


h2o வேண்டுனெமில் நாமும் கொஞ்சம் அக்கறை கொள்வது நியாயம் நண்பர்களே......

வியாழன், 17 டிசம்பர், 2009

11th hour - உலகம் அழிவதற்கான சாத்திய கூறுகளும் நம்முடைய அலட்சியமும்


படம் என்பது பொழுது போக்க என்பது உங்கள் கருத்து எனில் இப்படம் உங்களுக்கு நிச்சயம் ஒரு மாற்று கருத்து

எனக்கு படங்களை விமர்சனம் செய்து எழுதிய அனுபவம் இல்லை ஏன் நிறைய எழுதிய அனுபவமே இல்லை எனலாம், ஆனால் இப்படம் பற்றிய சிலருக்கு என்னால் தெரிவிக்க முடியுமானால் எனக்கு திருப்தியே.

2007ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு மிக சிறந்த டாகுமெண்ட்ரி படம், இது படம் அல்ல நமக்கான அறிவுறத்தல்

இப்ப(பா)டத்தில் பல்வேறு இயற்கை ஆவலர்களும், இயற்கை விஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும், அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் நம் உலகம் அழிந்து கொண்டிருக்கும் வேகத்தையும், அதற்கான காரணத்தையும், அக்காரணம் உருவாக காரணமான நம் மனதின் அலட்சிய போக்கையும், இயற்கையை பற்றிய அறியாமையும் மிக சரியாக நமக்கு உரைக்கும் படி கூறுகிறார்கள்.

ஹாலிவுட் நடிகர் லியார்டினோ டி கேப்ரியோ இப்படத்தை விவரித்து உள்ளார்.

இப்படம் முழுக்க உண்மையால் நிறப்ப பட்டது, அப்பட்டமான உண்மைகள், வனங்களின் அழிவும், கடல், நிலம் மாசுபடுவதும், பல்வேறு வகையான உயிரினங்களின் மறைவும், அதற்கு காரணமான நம்முடைய நடவடிக்கையும் என நம்மை அறைந்து கொண்டே போகிறது..

இப்படத்தின் ஆரம்பத்தில் காண்பிக்க படும் காட்சிகளின்(பல்வேறு அழிவுகள், நிகழ்வுகள்) வேகம் நம் உலகம் அழியும் வேகத்தை ஒப்பிடுவதாக எனக்கு தோன்றுகிறது.

மரங்கள் அறுக்க படுவது நமக்கான சாவுமணி (மரங்கள் நமக்கு இலவசமாக ஒரு வருடத்திற்க்கு அளிக்கும் ஆக்ஸிஜனை நாம் செயற்கையாக தயாரித்தால் உண்டாகும் செலவு 35 ட்ரில்யன் டாலர்கள் ஆனால் உலகில் உள்ள மொத்த நாடுகளின் ஒரு வருட பட்ஜெட்டை சேர்த்தாலும் வரும் தொகை 18 ட்ரில்யன் டாலர்களே, இயற்கை நமக்கு எவ்வளவு உதவுகிறது என்பதற்க்கு இது ஒரு சிறிய உதாரணம் - டேவிட் சுசிகி, இயற்க்கை ஆவலர்).

நம் இயற்க்கையில் இருந்து எவ்வளவு வேறு பட்டு இருக்கிறோம் என்பதற்க்கு ஒரு மிக சிறந்த உதாரணம் (நாம் காலையில் எழுவதில் இருந்து உறங்கும் வரை இயற்கையோடு எத்தனை சதவீதம் தொடர்பு படுத்தி கொள்கிறோம் எனில் அது 0 சதவீதமே, செயற்கை ஒளி, ஒலி, பொருள் என எல்லாமே செயற்கை தான், இப்படி இருக்கையில் இயற்க்கையின் ஸ்பரிசத்தை மறந்தே விட்டோம்)

நமக்கு சிந்திக்க தெரியும் எனும் ஒரே காரணதுக்காக் உலகில் உள்ள அனைத்து வகை விலங்கினங்களையும் அழிப்பது எந்த அளவிற்க்கு நமக்கு உரிமை உள்ளது???? உலகம் எல்லா உயிரனங்களுக்கும் பொதுவானது என்பதை என்று தான் உணருவோமே தெரியவில்லை. நம் உலகின் சூழ்நிலைமண்டலம் மரங்கள், மனிதர்கள், விலங்குகள் என எல்லா ஜீவராசிகளும் சரி சதவீதத்தால் உண்டானதே இதில் ஏது நிலை மாற்றம் உண்டானால் என்ன ஆகும் என்பது நம் 5ஆம் வகுப்பு உயிரியல் பாட புத்தகத்திலே உண்டு.

நாம் உபயோகிக்கும் ஒவ்வொறு பொருள் உருவாவ அதே அளிவிலான 32 பொருள் குப்பை கூடைக்கு செல்லும் அதனால் எவ்வள்வு பொருள் நாம் சேர்க்கிறமோ அதை போல 32 மடங்கு குப்பையை பூமிக்கு சுமத்துகிறோம்.

வடதுருவமும், தென் துருவமுமே உலகில் விழும் சூரிய கதிர்களை பெரும் அளவிற்க்கு திரும்ப அனுப்புகிறது, ஆனால் இன்னும் 20 வருடத்தில் இரு துருவங்களும் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது நாம் இதே நிலையை கடைபிடித்தால். உலகம் உச்சகட்ட வெப்பம் அடைந்து நாம் உருகி போகலாம், இதற்க்கு முக்கிய காரணம் எண்ணேய் அல்லது கரிமலவாயுவை அதிகம் வெளிப்படுத்தும் காரணிகளே(நிலக்கரி, பெட்ரோலிய எண்ணெய்). இதன் பயன் பாட்டை குறைத்து மாற்று எரிபொருள் அல்லது புதுப்பிக்கதக்க ஆற்றலே சிறந்த தீர்வு. காற்றிலும்,தண்ணீரிலும், சூரியகதிரிலும் எண்ணிலடங்கா ஆற்றல் உள்ளது நாம் இலவசமாக பெற. கணினியுலும், ராணுவதளவாடங்களிலும் நம்மால் ஆராய்ச்சி செய்து வெற்றி பெறும் பொழுது புதுப்பிக்கதக்க சக்தியிலும் நம்மால் வெற்றி பெற முடியும் நிச்சயமாக, ஆட்சியாளர்களின் மனுமும், இதற்க்கு மேலும் நமக்கு காலம் இல்லை என்கிற நிஜமும் இதை சாத்தியம் ஆக்கும், தேவை கொஞ்சம் அக்கறை, விழிப்புணர்வுமே.


விஞ்ஞானம் நமக்கு நிறைய உதவிகளை செய்து கொண்டிருக்கிறது, ஆனால் நாம் விஞ்ஞானைத்தையும் சரியாக புரியாமல், இயற்கையையும் சரியாக உணராமல் ஒரு தற்குறி வாழ்வே வாழுகிறோம் வேதனையுடன் என கூறுகிறார் ஓர் பேராசிரியர்.

நோபல் பரிசு பெற்ற இயற்கை ஆர்வலர் வாங்கரி மாத்தாய் மரங்களின் முக்கிய நலன்ங்களை விளக்குகிறார் அக்கறையுடன். ஒரு மரம் தன் வேரில் தேக்கி வைக்கும் தண்ணீரின் அளவில் ஒரு சிறிய வெள்ளமே உருவாக கூடும், ஆக நாம் எத்துனை எத்துனை மரங்களை வெட்டுகிறோமோ அத்துனை அத்துனை வெள்ளத்திற்க்கு வழி வகுக்கிறோம்.

இப்படத்தை ஒன்றி பார்த்தால் உங்கள் உள்ளத்தில் உண்டாகும் நடுக்கத்தை தவிர்க்க இயலாது நிச்சயமாக...

இப்படம் உலகம் அழிவதற்கான சாத்திய கூறுகளை மட்டுமே விளக்கவில்லை அதில் இருந்து மீள்வதற்கான (புதுப்பிக்கதக்க ஆற்றல், பசுமை கட்டடம், மாற்று எரிபொருள், மிக முக்கியமாக நமது மனபான்மை மாற்றம்) என எல்லா முயற்ச்சிகளையும் நமக்கு முன் வைக்கிறது ஆதங்கத்துடன்.

நமது சகோதர சகோதரிகள் பலர் இயற்கைக்காக போராடி கொண்டிருக்கின்ரனர் என்பதையும் இப்படம் தெளிவுற விளக்குகிறது.

இது 11ஆம் மணி நேரம் அல்ல 11ஆம் மணி 59ஆம் மணி துளியாகும் இப்பொழுது நாம் விழிக்கவில்லை எனில இனி எப்பொழுதும் விழிக்க இயலாது.........

அடுத்த முறை ஒரு பொருளை வாங்குவதற்க்கு, அல்லது அதை குப்பையில் போடுவதற்க்கும் முன்னும் யோசித்தே செய்வோம், இது மிக அவசியமான ஒண்று.

குப்பைய சிறந்த முறையில் கையால்ளுவதும் நம் உலகை அழிவில் இருந்து மீட்கும், நமது ஒரு ஒரு செயலும் நம் உலகை காக்க வேண்டும் என்ற உன்மத்துடன் செய்ய பழகுவோம்

மிக முக்கியமாக எனது தாழ்மையான வேண்டுகோள் இப்ப(பா)டத்தைhttp://video.google.com/videoplay?docid=-2174195060267517042# ஒரு முறை காண முயற்சியுங்கள்...

நன்றி நண்பர்களே உங்கள் பொறுமைக்கும், உலகை காக்க போகும் கரங்களுக்கும்

சனி, 5 டிசம்பர், 2009

முடி




முடி உதிரும் பிரச்சனையா














எங்கள் சாம்புவை பயன்படுத்துங்கள்




உங்கள் பிரச்சனை அறவே நின்று விடும், பின்ன அந்த சாம்ப போட்டதுக்குப்புறம் இப்படி ஆனா அப்புறம் எப்படி முடி உதிரும்???




அதனால முடிஞ்ச வரைக்கும் சீககாய் போடுங்கப்பா காசாவது மிஞ்சும் ஏதோ எனக்கு தெரிஞ்சித சொல்ரேன் நண்பர்களே......