புதன், 29 செப்டம்பர், 2010

ஒரு வசந்த காலம்...4



(இத படிக்கறதுக்கு முன்னாடி என்னோட முந்தய பதிவுகள் @ஒரு வசந்த காலம்...1, ஒரு வசந்த காலம்...2, ஒரு வசந்த காலம்...3யையும் படிச்சிடுங்க நண்பர்களே)

”ரத்தம் ஒரே நிறம்....சிகப்பு. அவன் ஐரோப்பியனோ, இந்தியனோ, அமெரிக்கனோ யாரா இருந்தாலும் ரத்தம் ஒரே நிறம் தான், அதே மாதிரி காதல்ங்கற உணர்வு எல்லாருக்கும் ஒண்ணு தான்.....” அய்யயோ என்னாச்சு எனக்கு தலைல அடிப்பட்டதால ஏதாவது இப்படி யோசிக்க சொல்லுதோ ச்ச ச்ச இது காதல், ஆமாம் அதான் டெஸ்டஸ்டரோனும், ஈஸ்ட்ரோஜனும் அதிகம் சுரக்க ஆரம்பிச்சிடிச்சி...டே டே என்ன ஆச்சி உனக்கு என்னமோ என்னமோ யோசிக்க்ற.....ஏன் இப்படி யோசிக்கிறேன்....என் தேவத தான் காரணம்...அவ பேர் என்ன......

“டே சிவா, சிவா.....இப்ப தான் கண்ணு முழிச்ச அதுக்குள்ள என்னடா விட்டத்த பாத்து கனவு காணுற...”

”அம்மா!!! நீயா....எப்பமா வந்த, எனக்கு என்னாச்சு கடசியா அடிப்பட்டதோட தான் நியாபகம் இருக்கு அதுக்கு மேல என்னாச்சினே தெரியல..”

“ஏண்டா உனக்கு எப்படி தெரியும்..2 நாளா மயக்குத்துல இருந்தடா, இப்ப தான் கண்ணு முழிச்சிருக்க....ரெண்டு நாளா எல்லாரும் எவ்வளவு பாடுப்பட்டோம், அப்பா வெளில மருந்து வாங்க போய்ருக்காரு, நம்ப சொந்தகாரங்க எல்லாம் வந்து பாத்துட்டு போனாங்க நீ மயக்கத்துல இருந்ததால உனக்கு ஒண்ணும் தெரியல..நல்ல காலம் எல்லாம் சரியாயிடிச்சி....”

“சரிம்மா நான் எப்படி இந்த வந்தேன்..உங்களுக்குலா எப்படி நான் இங்க இருக்கறது தெரியும்???”

“டே மாலினிடா அந்த பொண்ணு தான் உன்ன இங்க கொண்டு வந்து சேர்த்தா...உன் போன்ல வீட்டு நம்பர் இருக்கறத பாத்து கூப்பிட்டுருக்கு....நாங்க வந்து உன்ன பாக்க வரும் போது அந்த பொண்ணு அப்படி தேம்பி தேம்பி அழுதுச்சிடா” இப்படி எங்க அம்மா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே மாலினி மாலினி என் தேவதை பேரு மாலினி.....என் தேவதை தான் காப்பாத்தி இருக்கா....சிவா மாலினி ஜோடி பொருத்தம் நல்லா தான் இருக்கு...நான் பறக்க ஆரம்பிச்சிட்டேன் இறக்கையே இல்லாம...

“டே..டே..உன்ன தாண்டா திரும்ப கனவா?? என்ன தான் ஆச்சி உனக்கு...”

“அம்மா இப்ப அந்த பொண்ணு எங்கம்மா?”

“நம்ம வீட்ல தாண்டா இருக்கு...நீ கண்ணு முழிக்கிற வரைக்கும் இருந்து பாத்துட்டு தான் போவேன்னு ஒரு நாள் முழுக்க இங்க தான் இருந்துது, அப்புறம் டாக்டர் தான் சிவா சரியாயிட்டார், மயக்கம் தான் இருக்கு அதுவும் ஒரு நாள்ல சரியாயிடும் சொன்னப்புறம் தான் நானும் அப்பாவும் நீ வீட்ல இரும்மா...நாங்க அவன் கண்ணு முழுச்சதும் சொல்றோம் நீ வந்து பாருனு சொன்னோம் அப்ப தாண்டா அந்த பொண்ணு இங்க இருந்து போச்சி...என்னமோ போ அந்த பொண்ணு இருந்த்ததால நீ இப்ப உட்காந்து என்கிட்ட பேசிக்கிட்டு இருக்க....”

“என்னடா சிவா இப்ப எப்படி இருக்கு....தலைல வலி இருக்கா??” அப்பா

“நல்லா இருக்குப்பா.....தலவலிளாம் பரவாயில்ல...முட்டில மட்டும் லைட்டா வலி இருக்கு...”

“காலுள நல்ல ஃப்ரேக்சர்னு டாக்டர் சொன்னாரு......சரி அப்படி என்ன வண்டி ஓட்டுன...இப்படி கண்ணுமண்ணு தெரியாம அடிப்பட்டு கிடக்குற...அந்த பொண்ணு என்னடானா முன்னாடி இருந்த தடுப்ப கவனிக்காம போய் முட்டிட்டார்னு சொல்லுது”

பரவாயில்லயே என் ஆளு என்ன பலவிதத்துல காப்பாத்தி இருக்கே ஆனா இது எப்படி நடந்ததுனு சொன்னா காறித்துப்பிடுவார்னு “இல்லப்பா பஸ்ஸ லெஃப்ட்ல போய் ஓவர்டேக் பண்ணலாம்னு நினச்சேன், அங்க தடுப்ப இருந்தத கவனிக்கல அதான்”னு என்னமோ உளறி வச்சேன்.

“சரி பரவாயில்ல விடு, மாலினிக்கு தான் நாம கடன் பட்டிருக்கோம்..”

மாலினி, மாலினி உன்ன இப்ப பாக்கணுமே நான் என்ன பண்ணுவேன்னு நினைக்கும் போதே...”சரிடா நான் போய் மாலினிய கூட்டிட்டு வரேன், நீ கண்ணு முழிச்ச உடனே பாக்கணும்னு 100 முறை சொல்லி இருக்கும்...நீ ஒழுங்கா இந்த பால குடி ரெண்டு நாளா வெறும் குளுக்கோஸ் தான் உடம்புல ஏறிருக்கு”

########################################################################

"மூர்த்தி இப்ப என்ன தான் சொல்ல வர...நீ சொல்லரதலா நான் கேக்கரதுக்கு இல்ல பணம் வரலனுலா காரணம் சொல்லாத...எனக்கு எப்பவுமே ஒரு முடிவு தான் வேணும், காரணம் வேணாம் எனக்கு பணம் வேணும்...அதுக்கு என்ன பண்ண போற...நான் என்ன பண்ணினா பணம் கிடைக்கும் அத சொல்லு அத விட்டுட்டு சின்னபுள்ள மாதிரி ஏதாவது சொல்லாத...” ராமலிங்கம்

இவன்கிட்ட போய் மாட்டுனோமே சும்மாவே சீறுவான் இப்ப பணம் அந்த பொண்ணுக்கிட்டு இருந்து வசூல் பண்ணாம இவன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்கேனு நினச்சிக்கிட்டே மூர்த்தி “இல்லனா அந்த பொண்ண ரெண்டு நாளா ஆள காணும், அந்த பொண்ணோட பிரண்டுக்கிட்ட விசாரிச்சப்ப கள்ளகுறிச்சில எதோ அந்த பொண்ணுக்கு தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரியில்லனு பாக்க போய்யிருக்காம், இங்க வந்த உடனே பேசி வாங்கிடலாம் இல்ல மிரட்டி கடனுக்கு வீட்ட எழுதி வாங்கிடலாம் ஒண்ணும் பிரச்சின இல்லனா”

”பிரச்சனையா இல்லையானு நீயே முடிவு பண்ணாத...பொண்ணு வந்த பிரச்சன இல்ல, வரலனா என்ன பண்ணுவ...பேசிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது நானும் கள்ளகுறிச்சிக்கு தான் போக வேண்டி இருக்கு, அந்த பொண்ணயும் பாத்து ஒரு முடிவுக்கு வரலாம், வண்டிய எடு” ராமலிங்கம்

வாய கொடுத்தா வாங்கி கட்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான் அவன் சொல்றத அப்படியே செஞ்சாவாச்சும் ஒண்ணும் சொல்லாம இருப்பான்னு நினச்சிக்கிட்டே மகிந்திரா பொலிரோவோட 100HP இஞ்சின ஆன் பண்ணினான் மூர்த்தி.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

”டே..டே..இவன் வேற விட்டத்த பாத்து கனவு காண ஆரம்பிச்சிடுறான்....இந்தாடா சிவா இந்த பிரட்ட சாப்பிடுடா, உன்ன எங்கயாவது சாமியார் கிட்ட தாண்டா காட்டணும்..இப்படி பேனு இருக்க”

மனசுக்குள்ள ‘மாலினி வந்தா போதும்மா எல்லாம் சரியாயிடும்’

ஒரு 9 30 மணி போல வசந்த காலத்துல அடிக்கிர வெயில் எப்படி இருக்கும் தெரியுமா....அந்த வெயிலாள உடம்புல மெல்லிய வெப்பம் பரவும்....அதுக்கூட மெலிசா வீசுர இளங்காத்து....அந்த ரம்யிமான சூழ்நிலை இப்ப நான் இருந்த அறையிலயும் பரவ ஆரம்பிச்சது...ஆகா இது எதுக்கோ சிக்னல் ஆச்சே....

வந்துட்டா என் தேவதை...அட ஏன் அழுகறா...என்ன பாக்குறப்ப கண்ணுல இருந்து கண்ணீர் தாரை தாரையா வழியுதே...

“மாலினி ஏன் கண்ணு அழுவற....அட சின்னபுள்ள மாதிரி என்னது இது அவனுக்கு தான் ஒண்ணும் இல்லனு டாக்ட்டர் சொல்லிட்டாரே...அப்படியே இருந்தாலும் நீ என்ன சொந்தமா பந்தமா இப்படி அழுவிறியே புள்ள”னு என் அம்மா அவள சமாதனப்படுத்த என் மனசு கரைய ஆரம்பிச்சிடிச்சி நான் இவளுக்கு என்ன பண்ணினேன்......ஒரு ஒரு மணி நேரம் அவள விடாம பின்தொடர்ந்தத விட...உண்மையிலே காதல் இவ்வளவு சீக்கரம் இவ்வளவு ஆழமா மனசுக்குள்ள நுழையுமா தெரியல...ஆனா என் விசயத்துல இது நடக்குதே...எனக்கு கல்யாணம் ஆச்சா, என் பேரு என் வயசு எதுவும் அவளுக்கு தெரியாதே அப்புறம் எத வச்சி அவ என் மேல அன்பு வச்சா......கொஞ்சம் யோசிச்சி பாக்குறேன்.....எனக்கும் அது ஒண்ணுமே தோணலயே....காதல் வரதுக்குகூட ஒரு பட்டர்ஃப்ளை எஃபக்ட் தேவ படுது....சந்தோசமான நிகழ்வு.

”என் வாழ்க்கைல ரொம்ப நாளுக்கப்புறம் நான் சந்தோசமா இருந்தது நீங்க என்ன பாக்கறதுக்காக கூட வந்தப்ப தான்....ஏன்னுலா எனக்கு தெரியாது எனக்கு... எனக்கு..... உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, என்னால உங்களுக்கு அடிப்பட்ட உடனே என்னால தாங்கிக்க முடியல.....இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்” மாலினி மெல்லிய கண்ணீரோட தேம்பி தேம்பி இத சொல்ல.

அய்யோ பெண்ணே இவ்வளவு மென்மையா இருக்கியே.....என்ன நீ ஏன் இப்படி உணர்ச்சிய கட்டுப்படுத்தாம என் அப்பா அம்மா முன்னாடி கொட்டுற....நான் என் அம்மாவ பாக்க நான் எதிர்ப்பாத்ததுக்கு ஆப்போசிட் ரியாக்கசன கொடுத்துக்கிட்டு இருந்தாங்க......ரொம்ப சந்தோசமா போய் மாலினிய உச்சி முகர....என் பின்னாடி ராஜா, ஏ.ஆரோட பேக் கிரவுண்ட் மியூசிக் கேக்க ஆரம்பிச்சிது....வாழ்க்கைல என்னால இத விட சந்தோசமா இருக்கவே முடியாது.....

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

”மூர்த்தி நீ போய் அந்த பொண்ணு ஆஸ்பித்திரில எங்க இருக்கானு பாத்துட்டு கூப்பிடு” ராமலிங்கம். ராமலிங்கத்துக்கு எப்பவும் ஒரு பழக்கம் தனக்கு ஒரு விசயம் நடக்கணும்னு முடிவு பண்ணிட்டா அத முடிச்சிட்டு தான் மறி காரியம் பாப்பான்...அது சின்னதா இருந்தாலும் சரி பெருசா இருந்தாலும் சரி...காரியம் முடியணும் அவ்வளவு தான்....பின்விளைவு? அத பின்னால பாத்துக்கலாம்.

*சக்ஷ்டியை நோக்க சரவணபவனார்* டோன் சொல்லுல ஒலிக்க “சொல்லு மூர்த்தி என்ன பேசிட்டியா பொண்ணுக்கிட்ட”

”இல்லனே பேசல ரெண்டாவது ஃப்ளோர் ரூம் நம்பர் 201ல இருக்கா நீங்களே வந்து பேசி முடிச்சிட்டா நல்லா இருக்கும்”னு சொல்லிட்டு ஒரு 70,000க்கு ஏன் இவன் இவ்வளவு அவசரபடுறான்.....இவன புரிஞ்சிக்கவே முடியாது...அவனே வந்து ஏதோ பேசி தொலையுறான்..நம்மல விட்டா சரி.

“சரி வரேன்” ராமலிங்கம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முதல்முறையா என் தேவதைக்கிட்ட நான் ”மாலினி என்ன பாரு....”னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே ரூமுக்குள்ள ரெண்டு பேரு, பாக்கரதுக்கு நல்லவங்களா படல..நுழஞ்சாங்க, எங்கப்பா அவங்கள பயத்தோட பாக்க அதுல

 முதலாமானவன் “மூர்த்தி இந்த பொண்ணா???”

அடுத்தவன் ”ஆமாம்னே இந்த பொண்ணு தான்”

அத கேட்டு முதலாமானவன் நேரா மாலினிக்கிட்ட வந்து ‘ரப்’னு அறைய.....

‘கெட்ட நேரம்’ ஆரம்பிச்சிடிச்சி.

ஒரு வசந்த காலம்....தொடரும்.

வியாழன், 9 செப்டம்பர், 2010

இனிது இனிது....





மு.கு: இது சினிமா பத்தின பதிவு இல்லைங்கோ.........ஏன்னா படத்த பாசிட்டிவா எடுக்குறதா நினச்சிக்கிட்டு ரொம்ப பாஸிட்டிவா எடுத்துட்டாங்க, படம் முழுசுமா எப்ப பாத்தாலும் ஒருத்தர மாத்தி ஒருத்தர் கலாய்கிறாங்க, லவ் பண்றாங்க, சீனியருக்கு லவ் லெட்டர் கொடுக்குறாங்க, ஜாலியா புரபசரையே புரபோஸ் பண்றாங்க, சூப்பரா டிரெஸ் போட்டுக்கிட்டு கிளாஸ தவிர மத்த இடத்தல எல்லாத்தலையும் கும்பல் கும்பலா உட்காந்து பேசிகினே இருக்காங்க, என்ன தான் நண்பர்களோட நிகழ்வ படமாக்க முயற்சி இருந்திருந்தாலும் படம் நிறைய செயற்கைதனமா எனக்கு தெரிஞ்சிது ஏன்னா நான் சிட்டி கல்லூரில படிக்கலனாலும் கண்டிப்பா எந்த கல்லூரிலும் இப்படி நடக்காதுங்கறது திண்ணம்....59ஆவது நிமிசதுக்கு அப்புறம் முழு படத்தையும் ஓட்டியே பாத்துட்டேன்...

படத்துல இருக்க முக்கியமான கேரக்டர் எல்லாரும் மெக்கானிக்கல் இஞ்சினீரியங் டிபார்ட்மண்ட்ங்கற காரணத்தால படம் பாக்க ஆரம்பிச்சேன். அட பாவிகளா எந்த காலேஜ்ல டா மெக்குல அத்தண பொண்ணுங்க தெரிஞ்சிருந்தா அந்த காலேஜ்ல சேர்ந்து இருப்பேன். டிப்பார்ட்ண்ட்ல ஒரு பொண்ணு இருந்திருந்தா கூட அதுக்கே லவ் லெட்டர் கொடுத்து நாலு வருசத்த ஓட்டிருப்பேனே அத விட்டு ஜூனியர் பொண்ணுக்கு லெட்டர் கொடுத்து அசிங்க பட்டிருக்க மாட்டேனே....அது என்னமோ மெக்கானிக்கல் பசங்க எல்லாரும் தீவரவாதி மாதியே தானே எல்லா டிப்பார்மண்ட் பொண்ணுங்களும் பாத்தாங்க....அத மெய்ண்டயென் பண்ணறதா நினச்சிக்கிட்டு மூஞ்ச முறப்பா வச்சிக்கிட்டு உள்ளுக்குள்ள எவளாவது பாக்க மாட்டாளா..பேச மாட்டாளா எப்படி ஏங்கி இருப்போம்னு எங்க பொங்கி போன மனசுக்கு தான் தெரியும்.

அது என்னமோ இ.சி.இ பசங்களும், சி.எஸ்.சி, ஐ.டி பசங்களும் தான் கடல போட குத்தகைக்கு எடுத்த மாதிரி கேண்டீன்ல வருப்பானுங்க, லேப்ல வருப்பானுங்க அங்க வருப்பானுங்க, இங்க வருப்பானுங்க எப்ப பாத்தாலும் வருத்துக்கிட்டே இருப்பானுங்க அங்க புகையாது எல்லாம் எங்க சட்ட பாக்கெட்ல இருந்து தான் புகை வரும்......

அதே மாதிரி யாராவது என்ன படிக்கிரனு கேட்டு நாம “மெக்கனிக்கல்”னு பதில் சொன்னா கேள்வி கேட்டவன் பதில் சொல்ரது “அப்ப எப்ப பாத்தாலும் ஸ்பேனரும் கையுமா தான் இருப்பேன்னு சொல்லு ஹாஹா” காமெடி பண்றாராம், அடபாவிகளா கஸ்டப்பட்டு படிச்சா mechanical engineeringல mechanicங்கற வார்த்த இருக்கறதுக்காக ”அப்ப படிச்சிட்டு mechanic ஆக போறியா”னு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம கொஸ்டீன் போடுறது, ஏங்க அப்ப சிவில் படிச்சா என்னா செங்கலும் கையுமா இருப்பியானு கேப்பீங்களா, இல்ல டிரிபிள் ஈ படிச்சா என்ன கரண்டு கம்பியும் கையுமா இருப்பியானா கேப்பீங்களா, அது என்னமோ தெரியல எங்கள பாத்தா மட்டும் அப்படி கேக்க தோணுது போல...

அதே மாதிரி ஏதோ எங்களையெல்லாம் ஒதுக்கி வச்ச மாதிரியே பாக்கறது, சாஃப்ட்வேர் வேலைக்கு மெக்கானிக்கல், மேனுஃபேக்ச்சுரீங் please dont applyனு போடுறது. சரி எங்களுக்கு அங்க தான் வேல கொடுக்க மாட்டங்கறங்கனு எங்க கோர் இண்டஸ்ட்ரீகு போய் வேலைக்கு சேந்தா 5 ஆயிரம் 6 ஆயிரம் தான் சம்பளம் தரது, சரி பரவாயில்ல அனுபவம் கிடைக்குனு வேல செஞ்சாலும் அப்பப்ப மத்த டிப்பார்ட்மண்ட்ல கூட படிச்சிட்டு மென்பொருள் துறையில வேல பாக்கறவன் வாங்கற சம்பளத்த கம்பேர் பண்ணி பாக்கறப்ப வர காம்ளெக்கஸ கட்டுபடுத்த முடியாது...அப்புறம் கடைசிக்கு ஏதாவது இப்படி வெளிநாட்டுக்கு வந்து தான் ஓரளவுக்கு நல்ல சம்பளதுக்கு வேல பாக்கறது, இஞ்சினியரிங்கே எங்க டிப்பார்ட்மண்ட்ல இருந்து தான் உருவானது ஆனா கடசிக்கு நாங்க தான் லீஸ்ட் வாண்டட் இஞ்சினியர்ஸா இருப்போம் போல......

யாராவது மக்கள் ஆதரவு குரல் கொடுக்க இருக்கீங்களா...........

திங்கள், 6 செப்டம்பர், 2010

மரங்களை வெட்டுங்கள் (???!!!)

முன் குறிப்பு: நண்பன் ஒருவன் இதை அனுப்பி பதிவில் வெளியிடுமாறு சொன்னான், நல்லதா யாரு எழுதனா என்ன நாலு பேருக்கு போய் சேர்ந்து நல்லது நடந்தா சரி தான்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும்இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறதுஇந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ஆமாம்கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. 


மண்ணின் வில்லன் 

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும்பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும்'காட்டு கருவேல மரம்தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! ) 

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான்,இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில்இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல....இப்போதைய  பிரச்சனை....!? ,இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல்போனாலும்நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லைஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின்ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில்தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர்ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள்இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டிஇருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலைகாய்விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும்ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான்பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராதுதவிர மரத்தில் எந்த பறவைஇனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள்ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமேநச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம்மற்றும் ஆலமரமும் அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதைஉணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சிநம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல்பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம்செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!