செவ்வாய், 2 மார்ச், 2010

காலம் செய்யும் கோலம்


ஹ்ம் நாம நினைக்கிறது ஒண்ணு நடக்கரது ஒண்ணு இத பல பேர் பாடிட்டாங்க அப்பலாம் அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியல, கடவுளே இந்த வெளிநாட்டு வாழ்க்கை இருக்கு பாருங்க அத என்னனு சொல்ரது.

ரொம்ப நாளா ஊருக்கு போகணும் எல்லாரையும் பாக்கணும்னு ஆச அதுக்கு ஏத்த மாதிரியே பிளான் பண்ணியாச்சி ஆனா விதி யார தான் விட்டுச்சி டிக்கெட் போட்ட அடுத்த 2வது நாளே டே வீணா போனவனே இப்ப நீ ஊருக்கு போகல டிக்கெட்ட கேன்சல் பண்ணு அப்படினு சொன்னா எப்படி இருக்கும் தெரியுமா சம்மட்டியால அடிச்ச மாதிரி இருக்கும், என்னடா இவன் எப்ப பாத்தாலும் புலம்பிக்கிட்டே இருக்கான்னு நினைக்காதீங்க சின்ன புள்ளையா இருந்தப்ப கூட முட்டாய் வாங்கி தரனு சொல்லி ஏமாத்தனப்ப கூட இவ்வளவு வருத்த பட்டது இல்ல.

அது ஏங்க அப்படி, நான் பரவாலிங்க எனக்கு தெரிஞ்ச அண்ணன் ஒருத்தர் இங்க இருக்கார், ஊர பாத்து 9 வருசம் ஆச்சி, திரும்ப எப்ப ஊருக்கு போவாரோ தெரியல. பாதி ஆயுள் தண்டனை, ஊர்ல கூட ஜெயில்ல குடும்பத்தல இருந்தவங்க வந்து பாக்க முடியும் ஆனா இங்க ஏதோ பரிதாபத்தக்கு இத சொல்லல இதோட வலி ரொம்ப அதிகம்ங்க.

இதையெல்லாம் தாங்கி தாங்க இந்த வெளிநாட்டு வாழ்க்கைய வாழ வேண்டி இருக்கு, டிக்கெட்ட மாத்துனு சொன்ன உடனேயே உடம்புல இருந்து ஏதோ போய்டிச்சி, இதோ இன்னும் 20 நாள் தான் 10 நாள் தான்னு காலண்டர ஆசையோட,ஏக்கதோட பாத்துகிட்டு இருந்தேன்ங்க ஆனா ஒரு வார்த்த எல்லாத்தையும் தகர்த்திடிச்சி அதுக்காக அழ முடியாதுல்ல.

சரி உடுங்க ஏதோ உணர்ச்சில எழுதிட்டேன், இல்ல எல்லா வெளிநாட்டு வாழ் நண்பர்கள் சார்பா எடுத்துகோங்க.

அடுத்த வாட்டி டே உனக்கு என்ன துபாய்ல இருக்கனு கலாய்க்காதீங்க, ரொம்ப தான் நொந்து போய் இருக்கோம்(கேன்)

கருத்துகள் இல்லை: