திங்கள், 6 செப்டம்பர், 2010

மரங்களை வெட்டுங்கள் (???!!!)

முன் குறிப்பு: நண்பன் ஒருவன் இதை அனுப்பி பதிவில் வெளியிடுமாறு சொன்னான், நல்லதா யாரு எழுதனா என்ன நாலு பேருக்கு போய் சேர்ந்து நல்லது நடந்தா சரி தான்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும்இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறதுஇந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ஆமாம்கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. 


மண்ணின் வில்லன் 

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும்பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும்'காட்டு கருவேல மரம்தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! ) 

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான்,இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில்இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல....இப்போதைய  பிரச்சனை....!? ,இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல்போனாலும்நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லைஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின்ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில்தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர்ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள்இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டிஇருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலைகாய்விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும்ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான்பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராதுதவிர மரத்தில் எந்த பறவைஇனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள்ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமேநச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம்மற்றும் ஆலமரமும் அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதைஉணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சிநம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல்பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம்செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!



8 கருத்துகள்:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எனக்கும் மின்னஞ்சலில் வந்தது அன்பரே...

எல் கே சொன்னது…

kousalya2010.blogspot.com
this is taken frm above website..

மதன் சொன்னது…

// LK கூறியது...
kousalya2010.blogspot.com
this is taken frm above website..//

பாஸு அது எனக்கு தெரியாது, பிரண்ட் ஒருத்தன் அனுப்பி இத வெளியிடுடானு சொன்னான் சரி நாட்டுக்கு நல்லதுன நானும் வெளியிட்டுட்டேன் தப்புனா மன்னிச்சிடுங்க....

மதன் சொன்னது…

//
வெறும்பய கூறியது...
எனக்கும் மின்னஞ்சலில் வந்தது அன்பரே...//

எனக்கு அப்படி தான் பாஸு வந்ததது...........

பாரதசாரி சொன்னது…

நல்ல பகிர்வு தல... நல்ல விஷயங்கள தேடி பதிவா போட்டதுக்கு டாங்க்ஸ் ;-)

Kousalya Raj சொன்னது…

/நானும் சரி நல்ல விசயம்னு தானேனு நாலு பேருக்கு போய் சேரட்டும்னு //

இதுதான் என் நோக்கமும்...இந்த மெயில் வலைத்தளம் முழுதும் சுத்தி வந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு வருத்தம் இல்லை மகிழ்ச்சிதான். என்னிடம் பலரும் இதை பற்றி சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள்.

உங்கள் மூலமாவும் இந்த நல்ல விஷயம் பரவுவது தவறில்லை. அதை எடுக்க வேண்டியதும் இல்லை. புரிந்துகொண்டு எனக்கு தெரிவித்ததுக்கு நன்றி.

வாழ்த்துக்கள்.

மதன் சொன்னது…

// பாரதசாரி கூறியது...
நல்ல பகிர்வு தல... நல்ல விஷயங்கள தேடி பதிவா போட்டதுக்கு டாங்க்ஸ் ;-)
//

அய்யோ தல இத ஏற்கனவே யாரோ எழுதிட்டாங்க ஆனா ஒரு பாவி பய மெயில் அனுப்பி ஏதோ அவன எழுதன மாதிரி மச்சி இத பிளாக்ல போட்டு பரப்புனு சொல்லிட்டான் சரி நானும் நல்ல விசயம் தானேனு போட்டுட்டேன் அப்புறம் தான் தெரியுது அது ஏற்கனவே யாரோ எழுதன பதிவுனு அய்யோ எனக்கு அசிங்கமா போச்சி...எனக்கு மெயில் அனுப்பின நல்லவன தான் தேடுறேன் அவன் கைல கிடைக்கட்டம் அப்ப இருக்கு அவனுக்கு..........

பாரதசாரி சொன்னது…

"எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கபட்டது"ன்னு கீதைல ஏற்கனவே சொல்லியிருக்கு, அதை நம்ம மறுபடி சொல்றதில்லையா? நல்ல விசயம் சொல்லனும்னு செஞ்சிருக்கீங்க... வாழ்துக்கள் தல