ஞாயிறு, 10 ஜனவரி, 2010

பாஸ்போர்ட் - தொலைந்ததும் கிடைத்ததும்


கதைகள் சுவாரசியம் ஆனது என நம் எல்லோர்க்கும் தெரியும் உண்மை சம்பவம் கதை போல நிகழ்ந்தால் இன்னும் அக்கதை சுவாரசியம் ஆகிறது எனது ஒரு சிறிய கதை போல....

அது 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள். சென்னை மாநகரம் தீபாவளி பண்டிக்கைக்கு தயார் ஆகி கொண்டிருந்தது நான் என் ஆபிஸல இருந்து பர்மிசன் வாங்கிட்டு ஊருக்கு போக அமைந்தகரல இருந்து தயாராகி கிட்டு இருந்தேன். சரி அத்த பையன் ஒரு கால் பந்து கேட்டானு அவனுக்கு ஒரு பந்து வாங்கி கிட்டு ஒரு கூட்டமான கோயம்பேடு பஸ்ல ஏறி போனேன்.

நான் எப்ப பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணேனா(என்னடா இவன் கதைல பாஸ்போர்ட் பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டானேனு நினைக்காதீங்க இது ரொம்ப முக்கியம்) ம்ம் 2006ஆம் வருசம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல, அதுக்கு வந்துது பாருங்க என்கொய்ரி எங்க ஊர்ல ஒரு என்கொய்ரி வந்ததது அதுக்கபுறம் என்ன ஆச்சினே தெரியல ஆச்சி ஒரு வருசம் நானும் சென்னை சாஸ்திரி பவனுக்கு நடையா நடந்தேன், ம்ம்ம் ஒண்ணும் வேலைக்கு ஆகல எண்கொய்ரில கேட்டா இன்னும் உங்க ஃபைல் இங்க வரவேல்லனு சொல்லிட்டாங்க.

கடசியா கீழ்பென்னாத்தூர் போலீஸ் ஸ்டேசன்ல இருந்து ஒரு போன் பாஸ்போர்ட் எண்கொய்ரி வந்து இருக்கு வாங்கனு அப்பாடானு போனேன் என் காலேஜ் போனஃபைட் சர்டிபிக்கேட் யூஸ் பண்ண பலன் ஒரு வருசத்துக்கு மேல ஆச்சி எண்கொய்ரி வர சரி இப்பவாவது பாஸ்போர்ட் கிடைக்க போகுதேனு சந்தோசமா இருந்தேன் அதுக்குள்ள சட்டீஸ்கர்ல ஒரு வேல கிடச்சி அங்க போய்ட்டேன் அங்க இருந்து ஒரே மாசத்துல வந்துட்டேன் அது வேற கத.

சரி பாஸ்போர்ட் இப்ப வரும் அப்ப வரும்னு பாத்தா ம்ம் ஒண்ணும் வரல திரும்ப திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல போய் திரும்பவும் ஃபைல் நம்பர கொடுத்து அத கொஞ்சம் பாஸ்போர்ட் ஆபிஸ்க்கு அனுப்புங்கனு சொல்லிட்டு வந்தேன்.

கடசியா பாஸ்போர்ட்டும் வந்துது கொய்யால அப்பா பேர்ல ஒரு ஸ்பெலிங் மிஸ்டேகோடு என்ன கொடும சார். இது என்னடா இது வம்பா போச்சேன்னு திரும்ப நட சாஸ்த்திரி பவனுக்கு அங்க போய் கேட்டா உங்க மேல தான் தப்பு நீங்க தான் அப்பா பேர தப்பா கொடுத்துட்டீங்கனு ஒரே போடா போட்டுட்டாங்க அட பாவிகளா நான் எழுத்தனது எனக்கு தெரியாதா சரி அப்ளிக்கேசன நகல் எடுக்காதது என் தப்பு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

அப்புறம் என்ன பண்ணறது அந்த பாஸ்போர்ட்ட கேன்சல் பண்ணு அதுக்கு வேற தண்டத்துக்கு எவ்வளவோ கட்னேன் அது நியாபகம் இல்ல. எங்க அப்பாவோட பிறப்பு சான்றிதழ்லாம் தேடி எடுத்து அத வச்சி தக்கால்ல புது பாஸ்போர்ட் அப்ளை பண்ணேன்.

இது கரக்ட்டா அப்ளை பண்ணதால 2008 ஆம் ஆண்டு 10ஆம் மாசம் ஊஊஊஊஊஃப் பாஸ்போர்ட் கிடச்சிது அதுல திரும்ப ECNR ஸ்டேட்டஸ் இல்ல 12th மார்க் லிஸ்ட் எடுத்துக்கிட்டு அதுக்கு ஒரு நட நல்ல வேல அது ஒண்ணும் பிராப்ளம் இல்ல நல்லா கேட்டுக்கோங்க சாமிகளா ஒரு பாஸ்போர்ட் எடுக்க ஏறத்தாழ 3 வருசம் அலஞ்சேன்
”.

இப்ப கதைக்கு வருவோம் கோயம்பேட்ல போய் பஸ் ஏறலாம்னு பாத்தா இருக்குது பாருங்க ஒரு கூட்டம் ரொம்ப தான் ஓவரா இருந்தது. கைல ஒண்ணும் பெரிய லக்கேஜ்லா இல்ல ஒரு பேக் மட்டும் அதுக்குள்ள ஒரு புது பேண்ட் சேர்ட், ஒரு கால்பந்து என்னோட அழுக்கு துணி கொஞ்சம் அப்புறம் பாஸ்போர்ட். ஒரு வழியா ஒரு பஸ்ல மூணு பேர் உட்கார சீட்ல நடுமித்ல இடம் கிடச்சுது. அந்த சீட் டைருக்கு மேல இருக்குர சீட் ஒரு கால் மேட்ல ஒரு கால் சேத்துல கதையா வச்சிக்கிட்டு ம்ம்ம் அப்படியே கள்ளகுறிச்சிக்கு பிராயணம் ஆனேன் அது சேலம் போர பஸ்.

சாய்ந்தரத்துல இருந்தே நல்ல பசி சீக்கரம் ஊருக்கே போய் சாப்பிட்டுகிளாம்னு பாத்தா ம்ம் வேளைக்கே ஆகாது போல கண்டபடி அங்க அங்க நின்னு போச்சு, கடசியா விக்ரவாண்டி தாண்டி இருக்க ஒரு ஹோட்டல்ல வண்டிய போட்டாங்க அப்பாடானு பக்கத்துல இருக்கவர்கிட்ட பேக்க பாத்துக்க சொல்லிட்டு ஹாயா சாப்பிட போனேன் சாப்பாடு ஒண்ணும் சூப்பர் இல்ல மொக்கையா தான் இருந்துது. கைய கழுவிட்டு வந்து காசு கொடுக்க பில் கவுண்டர் வந்தா பஸ் நின்ன இடம் பேன்னு இருக்கு.

என் பக்கத்துல உட்காந்தவர் ரொம்ப நல்லவரா இருக்கணும் பேக்க மட்டும் நல்லா பாத்துகிட்டார் போல என்னை மறந்துட்டார்.

பில் கவுண்டர்ல கேட்டா பஸ் எடுத்து 10 நிமிசம் ஆச்சினு சொல்றாங்க எனக்கு என்ன மாதிரி பீலிங்கனே தெரியல ஒரு மாதிரியா இருந்தது, ஒரு ஆம்னி பஸ் நின்னுக்கிட்டு இருந்தது. ட்ரைவர் அண்ணாச்சி வாங்க தம்பி வண்டிய பிடிக்க முடியுதானு பாக்கலாம்னு சொன்னார் (அண்ணாச்சி எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்) பாக்கற பஸ் எல்லாம் சிவப்பு பெய்ண்ட் அடிச்சி நான் வந்த பஸ்சாவே கண்ணுக்கு தெரியுது.

அண்ணாச்சியும் முடிஞ்ச வரைக்கும் பஸ்ஸ விழுப்புரம் பஸ் ஸ்டேண்ட் வரைக்கு விரட்னாம். ஹ்ஹ்ம் நான் வந்த பஸ் கிடைக்கவேல்ல சரினு அவருக்கு ஒரு நன்றிய போட்டுட்டு அங்க இருக்க நேர காப்பாளர கேட்ட கூட்டமா இருக்கரதால ஒரு பஸ்ஸும் உள்ள வரலனு சொல்லிட்டார், எனக்கு புஸ்னு ஆய்டிச்சி.

சரி விதியேனு எங்கப்பாவுக்கு போன் போட்டு கள்ளகுறிச்சிக்கு வழியா சேலம் போற விழுப்புரம் மாவட்ட பஸ் எல்லாத்தலையும் பேக் இருக்கான்னு பாக்க சொல்லிட்டு நான் அடுத்து வந்த ஒரு பஸ்ல ஏறி பேனட்லே உட்க்காந்து முன்னாடி போகுற எல்லா பஸையும் கொட்ட கொட்ட பாத்துகிட்டு போனேன். கரக்ட்டா உளுந்தூர்பேட்டைக்கு முன்னாடி இருக்குற ரயில்வே கிராஸ்ங்க மூடிட்டாங்க அதனால எல்லா வண்டியும் ஹால்ட்.

நானும் கீழ இறங்கி சேறு சகதியெல்லாம் மிதிச்சிக்கிட்டே நான் வந்த பஸ்ஸ தேடினேன் ம்ஹ்ம் கிடைக்கல சரி இந்த பஸ்ஸையும் விட்டுட போறோம்னு திரும்ப வந்து ஏற்னா வண்டி கிளம்பிச்சிடிச்சி.

அங்க இருந்து கள்ளகுறிச்சி போற வரைக்கும் எங்க அப்பா அந்த பேக்க எடுத்து இருப்பாரானு ஒரே சந்தேகம் பேனட்ல இருந்து இறங்கவே இல்லையே நான் இருந்த நிலமைக்கு சூடுலாம் ஒண்ணுமே தெரியல :).

ஒரு வழியா கள்ளகுறிச்சி போய் இறங்குனேன்.

அங்கயும் புஸ்ஸு தான் 2 பஸ் போச்சாம் ரெண்டுத்தலையும் பேக் இல்லனு சொல்லிட்டார்.

என்ன பண்ரது அப்படியே பின்னாடி வந்த அடுத்த சேலம் பஸ்ல ஏறு. எனக்கு அந்த பேக் கண்டிப்பா கிடைக்கும்னு பெரிய நம்பிக்கைலா இல்ல ஆனா முயற்சி பண்ணி பாக்கலாம்னு ஏறிட்டேன். மனசுக்குள்ள ஒரு வேல பேக்க வேற யாராவது எடுத்து இருப்பாங்களா எடுத்தாலும் பாஸ்போர்ட்ட மட்டும் ஆவது திருப்பி அனுப்பிடுவாங்களா. அப்படி பேக் கிடைக்களானா போலீஸ்ல எப்படி கம்ப்ளைண்ட் பண்ணரது. அப்படியே கம்ப்ளைண்ட் பண்ணறதுனா எந்த ஸ்டேசன்ல பண்ணனும் அப்படி இப்படினு ஒரே சிந்தனை தான்.

ஒரு வழியா சேலம் பஸ் ஸ்டேண்ட் போய் சேர்ந்தேன் அங்க போனா நான் வந்த பஸ் எங்க இருக்குனு தெரியல. கண்ண கட்டி காட்ல விட்ட மாதிரி இருந்துது. சரினு ஒரு நேர காப்பாளர்ட்ட போய் விழுப்புரம் மாவட்ட பஸ்லா அங்க நிக்கும்னு கேட்டேன் அவரும் ஒரு பக்கமா கைய காட்னார். அங்க போய் பாத்தா ஒரு பத்து பஸ் சிவப்பு கலர்ல நிக்குது. எனக்கு நான் ஏற்ன வண்டி நம்பரும் தெரியல.

யோசிச்சி பாத்ததுல ட்ரைவர் சீட்டுக்கு பின்னாடி இருக்கிர கம்பில இத்தன உயருத்துக்கு மேல இருக்கரவங்களுக்கு முழு கட்டணம் அப்படிங்கற போர்ட்ல ஒரு ரோஸ் சிடிக்கர் ஒட்டி இருந்ததா நியாபகம். ஒரு 3 பஸ் ஏறி இறங்கி நாலாவது பஸ்ல பாத்தா அப்பாடி நான் ஏறுன பஸ்ஸ கண்டுபுடிச்சிட்டேன்.

நான் உட்காந்து வந்த சீட்ல போய் பேக்க தேடுனா!!! எனக்கு பக்னு இருந்துது பேக்க காணல..

அப்பனு பாத்து கண்டக்ட்டர் பஸ்ல ஏறி என்ன வேணும்னு கேட்டார். பேக்க மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னதும். என்ன கலர்? அப்படினு அவரும் ஒரு எண்கொய்ரி வச்சார். சிமெண்ட் கலர் பேக்கனு சொன்னதும் பேணட் பக்கத்துல போய் என் பைய எடுத்து கொடுத்தார்.

ஒரு பெரு மூச்சி விட்டுகிட்டே பேக்க வாங்கி பாஸ்போர்ட் இருக்கான்னு பாத்தா இருந்துது. அவருக்கு ஒரு பெரிய கும்புடு போட்டுகிட்டு வேற பஸ் ஏறி ஊர் போய் சேர்ந்தேன்.

யோசிச்சி பாத்தா அன்னைக்கு ராத்திரி முழுக்க என் பாஸ்போர்ட்ட துரத்தரத தவிர எனக்கு வேற ஆப்சன் இல்லனு தோணுது.

இப்படிலாம் நான் கஸ்ட்டப்பட்டு தொரத்தன பாஸ்போர்ட்டால எனக்கு நிச்சயம் பெரிய உபகாரம் இருக்கு. அது என்னனா அதால தான் என்னால துபாய் வர முடிஞ்சிது (மெக்கானிக்கல் இன்ஞியனரிங் முடிச்சிட்டு இங்க தான் வந்தாகனும் சம்பாரிக்க), துபாய் வந்ததால இந்த பதிவ எழுத முடிஞ்சுது.

இப்படி தாங்க என் பாஸ்போர்ட் தொலஞ்சிது கிடச்சிது......

2 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

மதன் சொன்னது…

@prabhakaran: வருகைக்கும் பின்தொடர்வதர்க்கும் மிக்க நன்றி பாஸ்.......